Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: 26 சாட்சிகளிடம் போலீசார் விசாரணை

டிசம்பர் 10, 2021 11:06

குன்னுார் : ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக, இதுவரை, 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னுாரில் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக, டி.ஜி.பி, சைலேந்திர பாபு தலைமையில், நேற்று மாலை குன்னுாரில் ஆலோசனை கூட்டம் நடந்தது. போலீஸ் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சம்பவம் தொடர்பாக, 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது; இதுவரை 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு முதல் முறையாக சென்று தீக்காயங்களுடன் போராடி, நான்கு அதிகாரிகளை விரைவாக மீட்ட கூடுதல் எஸ்.பி., முத்துமாணிக்கம், டி.எஸ்.பி., சசிகுமார், இன்ஸ்பெக்டர் பிரிதிவிராஜ், சிறப்பு எஸ்.ஐ., ரவி, காவலர் சிவா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்